திடீரென தீ பற்றி எரிந்த குப்பை - மின் இணைப்பு துண்டிப்பு!

வேலப்பாடி பகுதியில் கானாற்றில் கொட்டப்பட்டு இருந்த குப்பை திடீரென கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-30 05:02 GMT

 தீ 

வேலூர் மாநகரத்துக்குட்பட்ட வேலப்பாடியில் உள்ள ஆரணி சாலையில் அருகே கானாற்றில், குப்பை கிடங்கு போல் தினந்தோறும் அந்த பகுதி மக்கள் குப்பையை கொட்டி கொண்டு வருகின்றனர். கொட்டப்பட்டு இருந்த குப்பைகள் திடீரென எதிர்பாராத விதமாக இரவு வேளையில் மள மள வென தீப்பிடித்து எரித்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வேலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீச்சி அடித்து அரை மணி நேரத்துக்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால்,சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வேலப்பாடி சங்கரன்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
Tags:    

Similar News