அணைக்கட்டு வனப்பகுதியில் திடீர் காட்டு தீ

பள்ளிகொண்டா அருகே காட்டுப்பகுதியில் மர்ம நபர்கள் மரங்களுக்கு தீ வைத்துள்ளனர்.

Update: 2024-04-02 17:27 GMT

பற்றி எரியும் காட்டு தீ

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுற்றுவட்டார பகுதிகளில் காடுகளும், மலைகளும் நிறைந்து காணப்படுகிறது. இங்கு உள்ள காடுகளில் அரிய வகை மரங்கள், செடிகள் உட்பட வனவிலங்குகள் போன்றவை உள்ளது.

ஆனால், இப்பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர் வைக்கும் தீயால் மரங்கள் உட்பட வனவிலங்குகளும் அழிவை சந்தித்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் எவ்வித முயற்சிகள் எடுக்காததால் காடுகளுக்கும், மலைகளுக்கும் தீ வைக்கும் சம்பவம் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், பள்ளிகொண்டா, கந்தனேரி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் சமூக விரோதிகள் சிலர் தீ வைத்துள்ளனர். இதனால், மலை கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

Tags:    

Similar News