உச்சநீதிமன்ற தீர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானவை என மாண்பமை உச்சநீதிமன்றம் மிகச் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-15 10:42 GMT

முதல்வர் ஸ்டாலின் 

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் “தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானவை என மாண்பமை உச்சநீதிமன்றம் மிகச் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

இது வெளிப்படையான தேர்தல் நடைமுறையையும், அமைப்பின் ஒழுங்கையும் உறுதிசெய்திடும். இந்தத் தீர்ப்பு மக்களாட்சியை மீட்டிருப்பதோடு அனைத்து அரசியல் கட்சிகளும் சமதளத்தில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது. மேலும் இது அமைப்பின் மீதான சாமானிய மனிதரின் நம்பிக்கையையும் காப்பாற்றியுள்ளது.

Tags:    

Similar News