தமிழகம் நேர்மையான அரசியல்வாதியை இழந்தது -தருமபுர ஆதீனம் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவால் தமிழகம் நேர்மையான அரசியல்வாதியை இழந்துவிட்டதாக தருமபுர ஆதீனம் இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-28 04:40 GMT

விஜயகாந்த், தருமபுர ஆதினம்


தருமபுரம் ஆதினம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆன்மீகம் கொண்ட அரசியல்வாதியும் நடிகரும் ஆன திருவிஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணம் சம்பவித்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தோம். அரசியலில் நேர்மையும் ஆன்மீக பணிவும் சமுதாயத்தின்மீது இரக்கசிந்தனையும் மாற்றாரைமதிக்கும் பணிவும் கொண்ட தூய்மையான அரசியல்வாதியை முன்னாள் எதிர்கட்சித் தலைவரை சினிமாவில் நடிக்க மட்டுமே அறிந்தவர்.

வாழ்வில்பொய்மையாகக்கூட நடிக்கத்தெரியாத உத்தமர் ஆன்மீகத்தை வாழ்வில்இணைத்தே காரியம்இயற்றும் மாமனிதப்புனிதரை தமிழகம் இழந்துவிட்டதே நாம் மதுரையில் இருந்த காலத்தில் அவருடைய தந்தையாருடனாயதொடர்பும் அதுபோது விஜகாந்துடனாயதொடர்பு சமீபத்தில்நம்மை சந்தித்து ஆசிபெற்ற பிரேமலதா வரை குடும்பமே நம்மோடு தொடர்புடையது நம்ஆதீன பட்டிணப்பிரவேச பிரச்சனையின் போது முதலாவதாக அறிக்கை கொடுத்து பக்கபலமாக நிகழ்வுக்கு கட்சித் தொண்டர்களை அனுப்பிவைத்தவர். தமிழகம் நேர்மையான அரசியல்வாதியை இழந்தது சமுதாயத்தின் இதயம் துடிப்பைநிறுத்திக்கொண்டது .ஆன்மீகம் அக்கறையுள்ளோரை தவிர்க்கவிட்டது. அவரைஇழந்துவாடும் குடும்பத்தாருக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் ஆறுதலை தெரிவிக்கிறோம் ஆன்மா இறையடியில் இளைப்பாற பிரார்த்தனை செய்கிறோம். 

Tags:    

Similar News