நீட் தேர்வில் அதத்திய தமிழக மாணவர்கள்.. 720க்கு 720 மதிப்பெண்கள்!

Update: 2024-06-05 07:27 GMT

நீட் 

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் இருந்து 4 மாணவ, மாணவியர் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.

தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் நீட் தேர்வு, கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் 4,750 தேர்வு மையங்களில் எழுதி இருந்தனர்.

நேற்று இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 13,16,268 பேர் தேர்ச்சி அடைந்தனர். 100 இடங்களில் 8 தமிழ்நாட்டு மாணவர்கள் ஒரே மதிப்பெண்களுடன் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

அவர்களில் தமிழகத்தில் நாமக்கல் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற ஜெயந்திபூர்வஜா, ரோகித், ராஜனீஷ், சபரீசன் ஆகிய 4 பேரும் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 1 லட்சத்து 52 ஆயிரத்து 920 மாணவர்கள் தேர்வு எழுதி நிலையில் 89 ஆயிரத்து 426 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News