கள்ளக்குறிச்சியை "கள்ளச்சாராய குறிச்சியாக" மாற்றியதுதான் திராவிட மாடல்

கள்ளச்சாராயமோ, எந்த சாராயமோ, இல்லாத ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-20 02:24 GMT

தமிழிசை சௌந்தரராஜன் 

பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,    "கள்ளங்கபடம் இல்லாத கள்ளக்குறிச்சியை" - "கள்ளச்சாராய குறிச்சியாக" மாற்றியதுதான் திராவிட மாடல்.உயிரிழந்தவர்களை நினைத்து வேதனை அடைகிறேன். கவலைக்கிடமாக இருப்பவர்களை நினைத்து கவலை அடைகிறேன்.அவர்கள் நலம் பெற பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராயமோ, எந்த சாராயமோ, இல்லாத ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும். என தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News