கண்ணுக்குத் தெரிந்த கடவுள்: அன்னையர் தின வாழ்த்துக்கள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை அறிக்கை அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-12 17:37 GMT
செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருமை வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருடனும் முதல் தொடர்பு கொள்ளும் மற்றொரு உயிர் என்றால் அது அன்னை தான் அந்த புதிய உயிருக்கு உலகின் அனைத்தையும் கருவிலிருந்தே முதன் முதலில் அறிமுகப்படுத்துவதும் அன்னை தான். அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல வாழ்வின் சாரம் எல்லாருடைய வாழ்விலும் தாயின் பங்கு அளப்பரியது.

அன்னை என்ற சொல்லின் வலிமை மிகப்பெரியது அத்தகைய பெருமைமிக்க அன்னையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது இன்றைய தினத்தில் அனைவருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News