சாலை விபத்தில் ஆசிரியர் பலி
சாலை விபத்தில் ஆசிரியர் பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-16 12:16 GMT
பலியான ஆசிரியர்
கள்ளக்குறிச்சி சுமங்கலி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 55; அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று மாலை 5:30 மணியளவில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு முடித்து விட்டு ஸ்பிளண்டர் பைக்கில் வீட்டிற்குச் சென்றார்.
கச்சிராயபாளையம் சாலையில் அரசு மருத்துவமனை அருகே சென்றபோது, பின்னால் வந்த டிராக்டர் கிருஷ்ணமூர்த்தி மீது மோதியது. படுகாயமடைந்த அவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.