சேலத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
சேலத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-16 11:24 GMT
கோப்பு படம்
சேலம் அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரவுண்டானா அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த புத்திரகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.