பெற்ற மகளை பாலியல் கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

மகளை பாலியல் கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை.

Update: 2024-03-09 19:09 GMT
மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

மகளை பாலியல் கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கும்பகோணம் அருகே 52 வயதான கூலித் தொழிலாளி, தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால், கர்ப்பமடைந்த அச்சிறுமி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 2022 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டார். அப்போது, இச்சிறுமியைத் தந்தையே பாலியல் கொடுமை செய்த விவரம் தெரிய வந்தது.

இது குறித்து, கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து தந்தையைக் கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை நீதிபதி ஜி.சுந்தர்ராஜ் விசாரித்து சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2.50 லட்சம் நிவாரணம் வழங்குமாறும் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

Tags:    

Similar News