தமிழகத்தில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

Update: 2024-07-22 05:20 GMT

பொன்முடி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது. கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 476 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பி.இ., பி.டெக்., ஆகிய படிப்புகளில் 2 லட்சத்து 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. 2024-25-ம் கல்வியாண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களில், தகுதியான 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டது.

முதல்கட்டமாக, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

தொடர்ந்து, வருகிற 25-ந்தேதி முதல் 28-ந்தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 29ந்தேதி தொடங்குகிறது.


Tags:    

Similar News