நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான மோசடி வழக்கு ரத்து

பா.ஜ. நிர்வாகியும், நடிகையுமான குட்டி பத்மினிக்கு எதிரான மோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Update: 2024-06-30 04:05 GMT

நடிகை குட்டி பத்மினி

 சென்னை மடிப்பாக்கத்தில், ரமேஷ் என்பவருக்கு சொந்தமான சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றதாகக் கூறி, குட்டி பத்மினிக்கு எதிராக, கடந்த 2011 ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்யக் கோரி, நடிகை குட்டி பத்மினி வழக்கு தொடர்ந்தார். நிலத்தின் உரிமை கோரி புகார்தாரர் தரப்பில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உரிமையியல் தொடர்பான இந்த பிரச்னைக்கு குற்றவியல் வண்ணம் பூச முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
Tags:    

Similar News