கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலை திருட்டு!

குடியாத்தம் அருகே கோவில் பூட்டை உடைத்து சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-03-18 11:43 GMT

விநாயகர் சிலை திருட்டு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காமாட்சி அம்மன் பேட்டை பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் பொதுமக்கள் மக்கள் காலை மற்றும் மாலை பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (18.03.2024) பூஜை செய்வதற்காக அப்பகுதி பெண்கள் கோவிலுக்கு சென்றபோது,கோவிலில் பூட்டை உடைத்து கோயிலில் இருந்த விநாயகர் சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சடைந்தனர் .உடனே, இது குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த குடியாத்தம் நகர போலீசார் விநாயகர் சிலையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News