மகன் இறந்த சோகத்தில் தாய் விஷம் குடித்து இறப்பு
சேலம் அருகே சின்ன திருப்பதியில் மகன் இறந்த சோகத்தில் தாய் விஷம் குடித்து இறப்பு;
Update: 2023-11-29 13:20 GMT
மகன் இறந்த சோகத்தில் தாய் விஷம் குடித்து இறப்பு
சேலம் கண்ணக்குறிச்சி, சின்ன திருப்பதியை சேர்ந்தவர் தேவராஜ் இவரது மனைவி சித்ரா (42). இவர்களின் மகன் சரவணன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். அதன் பின்னர் சித்ரா மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி வீட்டில் விஷத்தை குடித்துவிட்டு சித்ரா மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது பற்றி கண்ணக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.