வாய்காலில் மூழ்கியவரை தேடும் பணி தீவிரம்

கீழ்பாவனி வாய்காலில் மூழ்கிய வாலிபரை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-04-01 08:20 GMT

நீரில் மூழ்கியவர்

கோவை கோபாலபுரம் பாலசுந்தரம் தண்டு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மனோஜ் வயது 31. இவர் அந்தப் பகுதியில் உள்ள கோவில் அர்ச்சராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்தார்.

அங்கு அம்மன் தரிசனம் செய்துவிட்டு மாலையில் பவானிசாகர் வழியாக கோவைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார் பவானிசாகர் போலீஸ் நிலையம் அருகே சென்ற போது அங்குள்ள கீழ் பவானி வாய்க்காலில் குளிக்க விரும்பி காரை நிறுத்தினர். பின்னர் அவர் வாய்க்கால் இறங்கி தண்ணீரில் குளித்தார் அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீரில் மூழ்கிய மனோஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 8 மணி வரை தேடியும் மனோஜ் கண்டுபிடிக்க முடியவில்லை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News