மாணவி மயங்கி விழுந்து பலி

தூத்துக்குடி அருகே 7ஆம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-16 13:33 GMT

மாணவி பலி

தூத்துக்குடி அருகே 7ஆம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் கடற்கரையாண்டி. இவரது மகள் ஆறுமுககனி (12), அங்குள்ள அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த அவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கினார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஆறுமுககனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News