பொதுக்கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்தவர் பலி

புதிதாக கட்டப்பட்டு வரும் மெட்ரோ வாட்டர் பொதுக்கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து லோடு தூக்கும் ஊழியர் உயிரிழந்துள்ளார்.

Update: 2024-06-24 13:14 GMT

உயிரிழப்பு 

 சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த சரண்ராஜ் என்பவர் வானகரம் மீன் மார்க்கெட்டில் லோடு தூக்கும் வேலை செய்து வந்தார். இவரது வீட்டருகே புதிதாக கட்டப்பட்டு வரும் பொதுக்கழிவு நீர் தொட்டியில் சரண்ராஜ் விழுந்து உயிரிழந்து கிடப்பதாக இன்று காலை மதுரவாயில் தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பெயரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மதுரவாயல் தீயணைப்புத்துறையுடன் சேர்ந்து இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அது கழிவு நீரை சேகரித்து பம்பிங் ஸ்டேஷனுக்கு அனுப்பும் இடமாக கட்டிக்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது.

சரண்ராஜ் உடம்பில் லேசான காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து மதுரவாயில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News