கோவிலில் திருட்டு

ராணிப்பேட்டை மாவட்டம், சென்னசமுத்திரம் சுப்பிரமணிய சாமி கோவிலில் இருந்த வெள்ளி கிரீடம், உண்டியல் பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2024-05-09 13:54 GMT

திருட்டு 

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேருராட்சிக்கு உட்பட்ட கலவை - சென்னசமுத்திரம் சாலையில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி கோவிலில் இருந்த 4 கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு, கருவறையில் இருந்த மூன்று வெள்ளி கிரீடம், திருடப்பட்டு, உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கோவில் நிர்வாகத்தினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் கலவை இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார் சென்று பார்வையிட்டனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News