நல்ல தலைவர்கள் பலர் உள்ளனர் ; நடிகர் விஜய் கருத்துக்கு செல்வப் பெருந்தகை பதில்.

அரசியலில் பல நல்ல தலைவர்கள் உள்ளார்கள். பார்க்கும் பார்வையில் தான் உள்ளது. சொந்தக் கருத்தை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது என தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பதிலளித்துள்ளார்.

Update: 2024-06-30 08:16 GMT

சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, இந்தக் கூட்டத் தொடர் சிறப்பாக நடந்தது மிகவும் நல்ல திட்டங்களை தீட்டி உள்ளார்கள் வரவேற்கத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும் பொழுது மைக் அணைக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் ஜனநாயக உரிமை மறுக்கப்படுவது எதார்த்தம் அதன் தொடர்ச்சி தான் நேற்று மைக் அனைக்கப்பட்டது.

இதை பாஜக மாற்றிக்கொள்ள வேண்டும் இதற்கு மேல் மக்கள் நல்ல தீர்ப்பை அடுத்து கொடுப்பார்கள். இதற்கு முன் இருந்த அரசுகள் எல்லாம் இரண்டே நாட்களில் நடத்தியுள்ளார்கள் அதை பார்க்கும் போது இது அதிகம் தான். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று நல்ல தலைவர்கள் வரவேண்டும் என்று பேசியது தொடர்பான கேள்விக்கு, நல்ல தலைவர்கள் உள்ளார்கள். கண்ணுக்குத் தெரியாத கதாநாயகனாக அமைதியாக பணியை செய்து வருபவர்கள் உள்ளார்கள் நல்ல கண்ணு உள்ளார், இல்லை என்று சொல்ல முடியுமா? எல்லாரும் நல்ல தலைவர்கள் தான் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது. அது அவருடைய தனிப்பட்ட சொந்த கருத்து .ஜனநாயக ரீதியில் என்ன வேண்டுமானாலும் பேசலாம். என்றார்.

Tags:    

Similar News