இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் மர்ம நபர்கள் பாட்டில்கள் வீசி சென்றதால் பரபரப்பு..

Update: 2023-10-28 11:39 GMT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னை தியாகராயர் நகர் செவாவியார் சிவாஜி கணேசன் சாலையில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று இரவு 8 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் அலுவலகத்தின் வளாகத்தில் முன்பக்க வாயிலில் 6 க்கும் மேற்பட்ட பீர் பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாம்பலம் காவல் துறையினர் முதற்கட்டமாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி சென்ற நபர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி சி டி வி காட்சிகளின் அடிப்படையில் போலிஸார் பாட்டில் வீசி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News