பீடி இலைகளை கடத்தியதாக 5பேர் கைது - இலங்கை கடற்படை விசாரணை!

தூத்துக்குடியைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

Update: 2024-02-21 18:18 GMT
ஐந்து மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

நெல்லை மாவட்டம் கூந்தங்குழி கடற்பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற தூத்துக்குடி இனிகோநகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் தெற்கே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் பீடி இலையை கடத்திச் சென்றதாக பைபர் படகை சுற்றி வளைத்து பிடித்துச் சென்றுள்ளனர்.

இனிகோநகர் பீட்டர் மகன் அஸ்வின் (18) சிலுவைபட்டி சுனாமி காலனி மரியசெல்வம் மகன் டிஜோ (24), தாளமுத்துநகர்‌ பார்த்திபன் மகன் மரிய அந்தோணி நரேஸ் (21), லூர்தம்மாள்புரம் மத்தியாஸ் மகன் மரியகாட்பிரே (24), இனிகோநகர் மெலிக்கண் மகன் அபிஸ்டன் (18) ஆகிய 5பேரை இலங்கை கல்பட்டி கடற்படை தள முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் இருந்து பைபர் படகுடன் சுமார் 2 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News