ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி - சுற்றுலா பயணிகளுக்கு தடை!

Update: 2024-07-31 07:10 GMT

 திற்பரப்பு அருவி

கன்னியாக்குமரி மாவட்டம் மலையோர பகுதிகளில் கனமழை பொழிவதால், பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகமாகி உள்ளது.

முழு கொள்ளளவு 48 அடியில் 45 அடியை எட்டியதை தொடர்ந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கோதையாற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடி, திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News