யார் சிறைக்கு செல்வார்கள் என காலம் பதில் சொல்லும் -ஓ.பன்னீர்செல்வம்

யார் சிறைக்கு செல்வார்கள் என விரைவில் காலம் பதில் சொல்லும்,எதையும் தவறாக புரிந்து கொள்வது கோவமாக பேசுவது, எடப்பாடி பழனிசாமியின் வாடிக்கை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Update: 2023-12-28 03:05 GMT

ஓ.பன்னீர்செல்வம்

ஈரோட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தொண்டரகள் உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக கூட்டம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் , ஓபிஎஸ் விரைவில் சிறைக்கு செல்வார் என்ற எடப்பாடி பழனிசாமி கருத்து குறித.த கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் , யார் சிறைக்கு செல்வார்கள் என விரைவில் காலம் பதில் சொல்லும் என்றார். எதையும் தவறாக புரிந்து கொள்வது , கோவமாக பேசுவது எடப்பாடி பழனிசாமி வாடிக்கை என்றும் , ஜெயல்லிதா நான் பொருளாளர் என்ற முறையில் கழக நிதி 2 கோடி பணம் தேவை என சொல்லிய போதும் கழக பண்த்தை வங்கி காசோலை மூலம் கொடுத்தேன் என்றும் , ஒரு வருடத்தில் திருப்பி தருவதாக சொன்ன ஜெயல்லிதா் ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்தார்.அதை சொன்னதை எடப்பாடி பழனிசாமி தவறாக புரிந்து பேசுகிறார் என்றார். மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வரவேண்டும் என நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க விற்கு ஆதரவு என்ற ஓ.பன்னீர்செல்வம் , சரியான நேரத்தில் ஒன்று சேருவோம் என சசிகலா தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்

Tags:    

Similar News