பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு செப்.12ம் தேதி தொடக்கம்!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

Update: 2024-09-09 05:53 GMT

Southern Railway

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதில், பெரும்பாலானோர் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள். பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரெயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்கும். அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை, 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை (செவ்வாய்க்கிழமை), 15 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் (புதன்கிழமை), 16 ஆம் தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அந்த வகையில், ஜனவரி 10-ந்தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 12 ஆம் தேதியும், ஜனவரி 11 ஆம் தேதிக்கு பயணம் செய்ய 13 ஆம் தேதியிலும், ஜனவரி 12 ஆம் தேதிக்கு வரும் 14 ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஜனவரி 13 ஆம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15 ஆம் தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News