போலீசாருக்கு விரல் ரேகை பதிவு செய்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் காவலர்களுக்கு விரல் ரேகை பதிவு செய்வது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது.

Update: 2024-03-23 16:54 GMT

பயிற்சி 

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விரல் ரேகை பதிவு செய்வது தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, குடியாத்தம் மற்றும் வேலூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர்கள் மற்றும் சிறப்பு பிரிவில் பணிபுரிந்து வரும் காவலர்கள் பங்கேற்றனர்.

அப்போது விரல் ரேகையை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும். எவ்வாறு அதை கணினியில் சேமிக்க வேண்டும் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News