பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டல் குழு அமைத்தல் குறித்து பயிற்சி

ஆண்டி மடத்தில் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டல் குழு அமைத்தல் குறித்து பயிற்சி நடைபெற்றது.

Update: 2024-05-08 13:46 GMT

உயர்கல்வி வழிகாட்டல் குழு

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சார்பில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டல் குழு அமைத்தல் மற்றும் உயர் கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்களின் பணிகள் குறித்து வட்டார அளவிலான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

வட்டார வள மையத்தில் நடைபெற்ற பயிற்சியை மாவட்ட உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து, உறுப்பினர்களுக்கு உயர்கல்வி பற்றிய கருத்துகளை வழங்கினார். ஆசிரியர் பயிற்றுநர்கள் பெ.ஆசைத்தம்பி, ந.சத்தியபாமா, கி.அகிலா, க.உத்திராபதி ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

முன்னதாக வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் வரவேற்று பேசினார். முடிவில், ஆசிரியர் பயிற்றுநர் ந.சத்தியபாமா நன்றி கூறினார்.பயிற்சியில் ஆண்டிமம் ஒன்றியத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி முதுகலை ஆசிரியர்கள், எஸ்எம்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், கல்வியாளர்கள், ஐடிகே தன்னார்வலர்கள்,முன்னாள் மாணவர்கள், நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் என 84 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News