போக்சோ குற்றவாளிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை - உயர்நீதிமன்றம் மறுப்பு.
போக்சோ வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க கோரிய கோரிக்கையை நிராகரித்து, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
Update: 2024-05-29 03:31 GMT
பைல் படம்
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போக்சோ குற்றவாளிக்கு தனியார் மருத்துவமனையில், இதய அறுவை சிகிச்சை செய்ய மூன்று மாதம் பரோல் விடுப்பு கோரி, அவரது மகன் வழக்கு தொடர்ந்தார். போக்சோ வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க கோரிய கோரிக்கையை நிராகரித்து, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை பெயர் பெற்ற அரசு மருத்துவமனை என்பதால், மனுதாரர் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அமர்வு தெரிவித்தது. அறுவை சிகிச்சைக்கு பின் தன் தந்தை பாரமரிப்பிற்காக செல்ல மனுதாரருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.