ராணிப்பேட்டையில் ஊடகப் பிரதிநிதிகளுக்கு அறிவுரை வழங்கிய டிஆர்ஓ

ராணிப்பேட்டையில் தேர்தலை முன்னிட்டு ஊடகப் பிரதிநிதிகளுக்கான அறிவுரை வழங்கும் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-21 16:16 GMT

ஆட்சியர் ஆலோசனை

நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு இன்று ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலகத்தில் இன்று ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் சுரேஷ் தலைமையில் ஊடக பிரதிநிதிகளுடன் அறிவுரை வழங்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் அரசியல் விளம்பரங்கள் மற்றும் பணம் கொடுத்து செய்தி வெளியிடுதல் தொடர்பாக ஊடகப் பிரதிநிதிகளுக்கு ஊடக சான்றிப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் நரேஷ் அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராம் பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News