குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைக்க டி டி வி தினகரன் வேண்டுகோள்

குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை திறந்து வெப்பத்தில் இருந்து மக்களை காக்க கட்சி நிர்வாகிகளை அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் வேண்டுகோள்.

Update: 2024-04-26 05:26 GMT

டிடிவி தினகரன் 

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் சில தினங்களுக்கு வெப்ப அனல் வீசக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் கழக உடன்பிறப்புகள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை திறந்திடுமாறு வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News