சர்ச்சையாக வெடித்த குலத்தொழில் குறித்த வானதி சீனிவாசனின் கருத்து!!

குலத்தொழில் குறித்த வானதி சீனிவாசனின் கருத்து சர்ச்சையாக வெடித்துள்ளதோடு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

Update: 2024-10-05 08:58 GMT

vanathi srinivasan

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் குலத்தொழில் தொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசு அனுமதிக்கவில்லை. குலத்தொழிலை திமுக அனுமதிக்க மறுக்கிறது. விஸ்வகர்மா சமுதாயத்திற்குரிய பெருமையான விஷயத்தையே குலைக்க நினைக்கிறார்கள். பெருமையை குலைக்க நினைப்பவர்களை கேள்வி கேட்க யாராலும் முடியவில்லை. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கூட மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் அமல்படுத்தப்படுகிறது. விஸ்வகர்மா திட்டத்தின் மூலமாக நிதியுதவி வழங்குவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஒவ்வொரு சாதிக்கும், ஒரு பெருமை இருப்பதை போல குலத்தொழிலுக்கும் பெருமை உள்ளது என்றார். விஸ்வகர்மா சமூகத்தினர் முன்பாக குலத்தொழில் குறித்து பேசிய வானதி சீனிவாசன் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. வானதி சீனிவாசனின் பேச்சு ஆணவத்தின் உச்சம். குலத்தொழிலை பற்றி பேசும் அனைவரும் அவர்களின் குலத்தொழிலை செய்யப்பட்டும். வானதி தனது குலத்தொழிலை செய்ய தயாரா என்று திருச்சி வேலுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

Similar News