மாநாட்டு கொடி மேடைக்கு வீரபாண்டி ஆறுமுகம் பெயர் - ஆ.பிரபு நன்றி

Update: 2023-12-04 03:18 GMT

வீரபாண்டி ஆ.பிரபு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் வீரபாண்டி ஆ.பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 17-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கிடையே மாநாட்டு திடல், மேடை, கொடி மேடை, பந்தல், நுழைவுவாயில் ஆகியவற்றுக்கான பெயர்களை தி.மு.க. தலைமை கழகம் நேற்று அறிவித்தது. அதில் கொடி மேடைக்கு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பெயரும், நுழைவு வாயில்களுக்கு வீரபாண்டி ஆ.செழியன், வீரபாண்டி ஆ.ராஜா ஆகியோரது பெயரும் அறிவித்து என்னுடைய தந்தை, அண்ணன்களின் பெயருக்கும், புகழுக்கும் மேலும் பெருமை சேர்த்திட்ட தமிழக முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கும், இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News