வேலூர்: மின்மாற்றியில் திடீர் தீ விபத்து!

வேலூர் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் உள்ள மின்மாற்றியில் திடீரென தீ வந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

Update: 2024-04-25 08:58 GMT

தீ விபத்து

வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் நுழைவு வாயிலின் எதிரே மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் எண்ணெய் இருக்கும் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் தரைக்கடை, தள்ளுவண்டி கடைகள் வைத்திருந்த வியாபாரிகள் உடனடியாக அங்கிருந்து பொருட்களை எடுத்து கொண்டு வேறு பகுதிக்கு சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மின்சார வாரியம், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின் ஊழியர்கள் அங்கு சென்று முதற்கட்டமாக மின்மாற்றியின் மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து வேலூர் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் செல்வ மூர்த்தி தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து சிறிது நேரத் தில் தீயை முற்றிலும் அணைத்தனர். வேலூர் நகரில் சுட்டெரித்த வெயில் காரணமாக மின்மாற்றியில் இருந்த எண்ணெய் சிறிதளவு வெளியேறி தீப்பற்றி எரிந்துள்ளது என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மின்மாற்றியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News