தேர்தல் அதிகாரியிடம் விக்ரமராஜா கோரிக்கை

வணிகர்களுக்கு தேர்தல் நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க தேர்தல் அதிகாரி, காவல்துறையினர், வணிகர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என வணிகர் சங்க பேரவை தலைவர் விக்ரமராஜா தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-03-17 03:02 GMT

விக்ரமராஜா

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்த பின் வணிகர் சங்க பேரவையின் தலைவர் விக்ரமராஜா அளித்த பேட்டியில், தேர்தல் நடத்தை விதிகள் அமலான பின் வணிகர்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இதனை 2 லட்சமாக உதயர்த்த கோரிக்கை தகுந்த ஆவணங்களோடு கொண்டு செல்லும் பொருட்களை தடுத்து நிறுத்த கூடாது ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை , ஆவணம் சமர்பித்த பின் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகளர்களுக்கு தேர்தல் நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க தேர்தல் அதிகாரி, காவல்துறையினர், வணிகர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும். என்றார். 
Tags:    

Similar News