விஜயகாந்த் மனதளவில் குழந்தை - சீமான் உருக்கம்

விஜயகாந்த் பார்க்கதான் கம்பீரமா இருப்பார் .பேசி பழகினால் மனதளவில் அவர் ஒரு குழந்தைதான் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கமாக தெரிவித்தார்.

Update: 2023-12-29 03:34 GMT

சீமான் 

நெல்லை மாவட்டத்தில் மழை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறுதி சடங்கில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்றாலே நினைவிற்கு வருவது அவரது துணிவு தான். தவசி படத்தில் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. விஜயகாந்த்தின் இடத்தை நடிப்பில் வேண்டும் என்றால் பூர்த்தி செய்ய ஒருவர் வரலாம். ஆனால் அவரைபோல ஒரு சிறந்த மனிதர் ஒருவர் வருவது கடினம். திரை உலகின் உச்சத்துக்கு சென்றபோதும் அதனை தலையில் ஏறாமல் பார்த்துகொண்டவர். ரஜினி, கமல் போன்றோகள் விஜயகாந்த் சொன்னால் கேட்பார்கள். பெரிய அரசியல் தலைவர்கள் இருக்கும் போதே அரசியலுக்கு வந்து 10.5-விழுக்காடு வாக்குகள் வாங்கி எதிர்கட்சி அந்தஸ்து பெற்றது என்பது சாதாரன விசயம் அல்ல. விஜயகாந்த் பார்க்கதான் கம்பீரமா இருப்பாரு ஆனால் பேசி பழகினால் மனதளவில் அவர் ஒரு குழந்தைதான் என உருக்கமாக தெரிவித்தார்

Tags:    

Similar News