விஜயகாந்த் உடல்நலம் பெற சிறப்பு வழிபாடு

கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-12-11 10:31 GMT

கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற சிறப்பு வழிபாடு நடந்தது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கபட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இந்நிலையில் அரியலூர் வடக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டும் என கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடத்தபட்டது. மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து சுவாமிக்கு மகா தீபாரதணை காண்பிக்கபட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் வடக்கு ஒன்றிய அவைதலைவர் கே.எஸ்.ரவி ஏற்பாடு செய்து இருந்தார். இதில் மாவட்ட பொருளாளர் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், கருப்பையா மற்றும் மாணவரணி, ஒன்றிய பொருப்பாளர்கள் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News