விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர்: செஞ்சி மஸ்தான்

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-06-18 07:34 GMT

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை அப்பொறுப்பில் இருந்து கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார்.. அந்த பொறுப்பிற்கு புதிய மாவட்ட பொறுப்பாளராக சேகர் நியமனம் செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அமைச்சர் செஞ்சி மஸ்தானின் கட்சி பதவி பறிக்கப்பட்டது பேசு பொருளான நிலையில் கட்சியில் மாவட்ட அவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News