காஞ்சிபுரம்: அபராதம் விதித்தும் விதிமீறும் வாகனங்கள்

Update: 2023-11-17 08:22 GMT

போக்குவரத்து விதிமீறல் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதி, நெல்லுக்கார தெரு, காமராஜர் தெரு, மூங்கில் மண்டபம், காந்தி ரோடு ஆகிய பிரதான சாலைகளின் நடுவே, பேரிகார்டு என, அழைக்கப்படும் இரும்பிலான தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், முக்கிய இடங்களில் மட்டும் பாதசாரிகள் கடந்து செல்ல பேரிகார்டில் இடைவெளி ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வரிசையில், பெரிய காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே, மாணவியர் சாலை கடந்து செல்வதற்கு, இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கார், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகள் விதி மீறி செல்கின்றனர். குறிப்பாக, போக்குவரத்து போலீசார் இல்லாத நேரங்களில், சாலையின் ஒரு பகுதியில் இருந்து, மற்றொரு பகுதிக்கு, விதிகளை மீறி கடந்து செல்கின்றனர். இதுபோன்ற நேரங்களில், இரு சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என, சிறிய ரக வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர். எனவே, காஞ்சிபுரம் போக்குவரத்து போலீசார் கண்காணித்து தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'விதிமீறும் வாகனங்களுக்கு அவ்வப்போது அபராதம் விதிக்கிறோம். 'இருப்பினும், சம்பந்தப்பட்ட இடத்தை கண்காணித்து பேரிகார்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
Tags:    

Similar News