வேலூர் அருகே விதியை மீறி பேனர் வைப்பு: பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

வேலூர் அருகே தேர்தல் விதியை மீறி பேனர் வைத்த பாஜகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-03-25 16:47 GMT

காவல் நிலையம் 

வேலூர் மாவட்டம் பாகாயம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொரப்பாடி வள்ளலார் மண்டபம் அருகே உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகம் அருகில் பா.ஜனதா விளம்பர பேனர் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் குறிப்பிட்ட அளவை விட பெரிய அளவில் பேனர் வைக்கப்பட்டு இருந்ததால் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் வேலூர் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் தர்மன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கிரீன் சர்க்கிள் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே அனுமதியின்றி இந்திய ஜனநாயக புலிகள் குறித்து சுவர் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதனை போலீசார் அழித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News