தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு பிடிவாரண்ட்.

97 வயது சுதந்திர போராட்ட வீரருக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்காத தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு பிடிவாரண்ட் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Update: 2024-07-05 02:53 GMT

பைல் படம் 

97 வயது சுதந்திர போராட்ட வீரருக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்காத தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு பிடிவாரண்ட் கொடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தனக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் வழங்காததால் சுதந்திர போராட்ட வீரர் வேலு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வாரண்டை செயல்படுத்தி, ஜூலை 8 ஆம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News