எங்களுக்கு யாரும் போட்டியில்லை:திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்

எங்களுக்கு யாரும் போட்டியில்லை எங்களின் இலக்கு என்பது தமிழகத்தில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது மட்டுமே என தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-28 09:07 GMT

வாக்கு சேகரித்த தமிழச்சி தங்கபாண்டியன்

சென்னை, தி.நகர் பகுதியில் நான்காவது நாளாக திமுக தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் . வாக்கு சேகரிப்பில் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து மாவட்டச் செயலாளர் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு மற்றும் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதிப் பரப்புரையினைத் தொடங்கி வைத்தனர்.

நான்காவது நாளாக தேர்தல் வாக்கு சேகரிப்பு பணியில்,141-வது வட்டம் தி.நகர் செங்கேணி அம்மன் கோயில் தெருவில் தொடங்கி,சித்தி விநாயகர் கோவில் தெரு, சி.ஐ.டி. நகர் 4-வது பிரதா சாலை, ஸ்ரீராம் பேட்டை ரோடு, சி.ஐ.டி நகர் 3-வது பிரதான சாலை சி.ஐ.டி நகர் 1,2,3 குறுக்குத் தெரு, கேனால் பேங்க் ரோடு,தென்மேற்கு போக் சாலை, தண்டபாணி தெரு,மூசா தெரு, மதுரை வீரன் கோயில் தெரு, தென்மேற்கு போக் சாலை,

தொடர்ந்து சாதுல்லா தெரு, முப்பாரப்பன் தெரு, அப்துல் அஜிஸ் தெரு, வ.உ.சி தெரு, தெற்கு தண்டபாணி தெரு, தென்மேற்கு போக் சாலை, வேம்புலி அம்மன் கோவில், கார்ப்பரேஷன் காலனி முதல் தெரு அதனைத் தொடர்ந்து,, கார்ப்பரேஷன் காலனி 3வது தெரு, சீனிவாசபுரம், காமராஜர் காலனி, பர்கிட் ரோடு, மன்னார் தெரு, தாமோதரன் தெரு, சிவாஜி தெரு, கோபால் தெரு, சீனிவாசன் தெரு என மொத்தம் 43 இடங்களில் வாக்கு சேகரிக்க உள்ளார் .

தி.நகர் பகுதியில் வாக்கு சேகரித்த தமிழச்சி தங்கபாண்டியனுக்கு மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு மற்றும் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி சார்பில் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தியாகராய நகரில் வாக்கு சேகரிப்பின் போது.. உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எந்த அளவிற்கு உள்ளது? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், நீங்கள் இந்த மக்களின் எழுச்சியையும், அன்பையும் பார்த்தாலே தெரிந்து கொள்வீர்கள், எங்களின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று...

எங்களுக்கு யாரும் போட்டியில்லை, எங்களின் இலக்கு என்பது தமிழகத்தில் அதிகப்படியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.... மதுரை - எய்ம்ஸ் கொண்டு வராத, வெள்ள நிவாரணம் உள்ளிட்ட தமிழர்களின் கோரிக்கைகள் எதற்குமே செவி சாய்க்காமல், தமிழர்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய ஆட்சியிலிருக்கும் பாஜக விற்கும், நேற்று வரை, பாஜகவுடன் உறவிலிருந்து, கள்ள மவுனம் சாதிக்கும் அதிமுக விற்கும், மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்;

இந்தத் தேர்தலில் திமுக - இந்தியா கூட்டணியைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வார்கள்; இது உறுதி என்றார் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்.

Tags:    

Similar News