நலத்திட்ட முறைகேடுகள் - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

நலத்திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையா? புகார் அளித்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படுமா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2024-04-03 05:43 GMT

சென்னை உயர் நீதிமன்றம் 

பிரதமர் வீட்டு வசதி திட்ட மானியம் வழங்கியதில் 54.40 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது விசாரணை நிலை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வீட்டு வசதி திட்டங்களுக்கான மானியத் தொகை வழங்கியதில் 54 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக சோழவரத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 25 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் பதிகளிக்கப்பட்டது. நலத்திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையா? புகார் அளித்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி வழக்கின் விசாரணையை ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Tags:    

Similar News