தமிழசை செளந்திராராஜனுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை- ஈவிகேஎஸ்.இளங்கோவன்

Update: 2023-12-18 07:45 GMT

ஈவிகேஎஸ்.இளங்கோவன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஈரோட்டில் நடந்த மக்களுடன் முதல்வர்  திட்ட துவக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும்,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ஆளுநர் தழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா , புதுச்சேரி மாநிலங்களில் மட்டும் அவர்களது வேலையை பார்க்க வேண்டும் என்றும் அதனை விட்டுவிட்டு சம்மன் இல்லாமல் ஆஜராகி கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் என்ன வேலை என்றே எனக்கு தெரியவில்லை என்ற EVKS இளங்கோவன் தமிழசை செளந்திராஜன் தமிழ்நாட்டுக்குள் நுழைய கூடாது என்றார். உடல் நிலை சரியில்லாத போதும் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து நிவாரணம் 6 ஆயிரம் ரூபாயை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த பொழுது மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்காமல் வாகனத்தில் மட்டுமே சென்று மக்களை பார்த்துவிட்டு சென்றார்.அப்போது உயிர் சேதங்களும் ஏற்பட்டன.ஆனால் இப்போது ஏற்பட்ட மழை பாதிப்பில் எந்த ஒரு உயிர் சேதமும் இல்லை. என்றார்.

Tags:    

Similar News