சிறுமியை இரண்டாவது திருமணம் செய்த காவலர் - மனைவி புகார்

இரண்டாவது திருமணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-11 07:06 GMT

சிறுமியை இரண்டாவது திருமணம் செய்த காவலர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ், 43; இவரது மனைவி விஜயலட்சுமி, 33; கடந்த ஆண்டு இருவரும் காதலித்து கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். ரமேஷ், மனைவியிடம் வரதட்சணை கேட்டு பெங்களூருவில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டார். இந்நிலையில் விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்து இறந்தது. கடந்த 30ம் தேதி சந்தைப்பேட்டையில் உள்ள கணவர் வீட்டிற்கு விஜயலட்சுமி வந்தபோது, 18 வயதுக்கும் குறைவான ஒரு சிறுமியை, கணவர் ரமேஷ் 2வது திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனைத் தட்டிக்கேட்ட விஜயலட்சுமியை, ரமேஷ் அவரது தாய் சுந்தரி, 57; உறவினர்கள் பாரதி, விஜயன் ஆகியோர் தாக்கி மிரட்டினர். இதனை அடுத்து விஜயலெட்சுமி இது குறித்து புகார் அளித்துள்ளார்
Tags:    

Similar News