கள்ளக்காதலனை தாக்கிய பெண் கைது

பேரணாம்பட்டு அருகே கள்ளக்காதலனிடம் குடும்பம் நடத்த வருமாறு பிரச்சனை செய்து, கொலை மிரட்டல் விடுத்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-04-21 14:50 GMT

கள்ளகாதலனை தாக்கிய பெண் கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு டவுன் சாலைபேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவருக்கு திருமணம் ஆகவில்லை. அதே பகுதியை சேர்ந்த பார்த்தீபன் மனைவி நித்யா (33). இவருக்கும், ராஜேசுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜேஷ் அதேபகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். இதனையறிந்த நித்யா அங்கு சென்று ஏன் வீட்டிற்கு வரவில்லை, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு தகராறில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த நித்யா கட்டையால் கள்ளக்காதலனை தாக்கியதாகவும், அப்போது ராஜேஷ், கள்ளக்காதலி நித்யாவை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இருவரும் தனித்தனியாக பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து நித்யாவையும், ராஜேசையும் கைது செய்தார்.

Tags:    

Similar News