மயங்கி விழுந்த பெண் பலியான சோகம்
பாகாயம் பகுதியில் மயங்கி விழுந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-04 16:03 GMT
கோப்பு படம்
வேலூர் பாகாயம் சிவராமபுரத்தை சேர்ந்தவர் ஜெயகுமார். இவரது மனைவி கிரிஜா (50). இவருக்கு ரத்த அழுத்தம் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் அவர் சம்பவத்தன்று வீட்டில் திடீரென மயக்கம்போட்டு கீழே விழுந்தார்.
உடனடியாக அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.