மர்ம கும்பலால் தாக்கப்பட்ட தொழிலாளி சாவு

சேலத்தில் மர்ம கும்பலால் தாக்கப்பட்ட தொழிலாளி சாவு உயிரிழந்தார்.

Update: 2023-12-08 13:35 GMT

 பைல் படம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (50), கூலி தொழிலாளி, இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த 26-ந் தேதி கார்த்திகை தீபம் அன்று தகராறு ஏற்பட்டது. இதில் மாதேஸ்வரன் மர்ம கும்பலால் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்த மாதேஸ்வரன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தார்.

தொடர்ந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவருக்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். அந்த கும்பல் தாக்கியதில் ஏற்பட்ட காயத்தில் மாதேஸ்வரன் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் உடல் நலக்குறைவு காரணமா? என்பது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News