கார் மீது டூ வீலர் மோதிய விபத்தில் தொழிலாளி பலி!
வேலூர் அருகே கார் மீது டூ வீலர் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-30 09:09 GMT
வழக்குப்பதிவு
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் திருமனை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜய்குமார் (30).இவரது மனைவி திவ்யா (25). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். அஜய்குமார் சம்பவத்தன்று டூவீலரில் மனைவியை அழைத்து சென்று ஆஸ்பத்திரியில் விட்டு விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கொணவட்டம் அருகே சென்றபோது ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது எதிர்பாராத விதமாக மோதினார். இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.