சீர்மரபினர் நல வாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

சீர்மரபினர் நல வாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-23 12:20 GMT

மாவட்ட ஆட்சியர் 

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீர்மரபினர், நல வாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்தது, இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித் தொகை, இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை , ஈமச்சடங்கு செலவுக்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை , மகப்பேறு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி செலவுத் தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் ஆகிய  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே இந்நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும், 18 }60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்,  அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாதவராக இருத்தல் வேண்டும்(அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழில்) குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

Tags:    

Similar News