சாலிகிராமத்தில் இளம்பெண் தற்கொலை
சாலிகிராமத்தில் குடும்ப தகராறில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-06-08 18:02 GMT
தற்கொலை
சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் குரு பிரசாத். இவரது மனைவி சந்தியா (27). சந்தியா நேற்று சாலிகிராமத்தில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் அவரை தொடர்பு கொண்ட குரு பிரசாத் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தியா படுக்கை அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்