பெண் பக்தரிடம் பணம் திருடிய வாலிபர் கைது

திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் பெண் பக்தரிடம் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-22 06:52 GMT

கைது

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராம் மகன் ராஜேஷ் (42). இவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது மனைவியுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த ரூபாய் 450 பணத்தை திருடினார். உடனே அருகில் இருந்த பக்தர்கள் அந்த வாலிபரை பிடித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர், நெல்லை சுத்தமல்லி வஉசி தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் கரிஹரசுதன் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்தனர். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News